Wednesday, January 30, 2013

Mugam - Manirathnam.....

மணிரத்னத்தின் இயற்பெயர் சுப்பிரமணி. அப்பா பெயர் ரத்தினம். இரண்டின் மிக்ஸிங்தான் மணிரத்னம்.
பேருந்துப் பயணம் மணிரத்னத்துக்குப் பிடித்த விஷயம். வெளி மாநிலங்களில் தொப்பியும் மஃப்ளரும் அணிந்துகொண்டு பேருந்துகளில் தான் பயணிப்பார். அவர் படங்களில் ஏதாவது ஒரு கேரக்டர் பேருந்தில் பயணிப்பதுபோன்ற காட்சி நிச்சயம் இடம்பெறும்.
ஆச்சர்யமாகக் 'கடல்’ படப்பிடிப்பில் வழக் கத்தைவிட அதிகமாகவே கோபப்படுகிறார் மணிரத்னம். அவருடைய யூனிட் ஆட்களுக்கே இது புதுசு. ஆனால், 'பேக்கப்’ சொன்ன பிறகு, உதவியாளர்கள் அருகில் வந்து தோள் தட்டி 'ரொம்பக் கோபப்பட்டுட்டேன்ல... ஸாரி!’ என்கிறார்.
குடும்பத்தின் கடைசிப் பிள்ளை. 'இனியும் குழந்தை வேண்டாமே!’ என நினைத்த அவர் தாயார், கோயிலைச் சுற்றி வேக வேகமாக நடப்பாராம். கரு இயற்கையாகவே கலைந்துவிட்டால் நல்லது என்பதுதான் அந்த நடைப் பயிற்சிக்குக் காரணம். ஆனாலும், ஆரோக்கியமாகவே பிறந்தார் மணி. அதனால், அவரை 'தெய்வக் குழந்தை’ என்றே நினைத்தார்கள் அவருடைய குடும்பத்தினர். சில வருடங்களுக்கு முன் இதய நோய் காரணமாக மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டபோதுகூட, 'அவருக்கு எதுவும் ஆகாது!’ என அவர்கள் ஆழ்ந்த நம்பிக்கையில் இருந்தார் கள்.
வீட்டிலும் நண்பர்களுடனான சந்திப்பிலும் 95 சதவிகிதம் ஆங்கிலத்தில்தான் பேசுவார். ஆனால், அவருடைய படங்களில் குழந்தைகள் பேசிக்கொள்வதாக இருந்தால்ஆங்கில வசனங்கள் இருக்காது. 'மம்மி, டாடி’ என்பதற்குக்கூடத் தடா.
செடிகள் மீது குழந்தைகளின் பிரியத்தைக் காட்டுவார் மணி. கண் முன் யாரேனும் செடியின் இலையைக் கிள்ளிவிட்டால்கூடப் பதறுவார். நண்பர்களுடன் ரிலாக்ஸாக மனம்விட்டுப் பேச மணி தேர்ந்தெடுக்கும் இடத்தின் பின்னணியில் எப்போதும் செடிகள் இடம்பிடித்திருக்கும்.
'இதயத்தைத் திருடாதே’ படத்தில் இருந்து இவரிடம் 'உதவி இயக்குநர்’ அந்தஸ்தில் பணி புரிந்த யூ.வி.பாணிக்கு இப்போது வயது 80. தன் தந்தை ஸ்தானத்தில் அவரை மதிக்கும் மணி, அவருக்கு அலுவலகத்தில் தனி அறை கொடுத்திருக்கிறார்.
இவருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா... இல்லையா என்று முடிந்தால் கண்டுபிடித்துப் பாருங்களேன்.
சினிமாவில் சென்டிமென்ட் உடைப்பதென்றால் அவ்வளவு உற்சாகம். படத்துக்கு 'அக்னி நட்சத் திரம்’ எனப் பெயரிட்டபோது, 'படம் ஓடாது...அந்தப் பெயரை மாற்றுங்கள்’ என்று பல தரப்புகளில் இருந்தும் அறிவுரை. இறுதி வரை தன் முடிவில் உறுதியாக இருந்தார்.
பெரும்பாலும் தமிழ்ப் படங்கள் பார்க்கவே மாட்டார். பார்த்த படங்களில் மனதை மிகவும் பாதித்த படம் 'நான் கடவுள்’. ''நல்லா இருக்குல்ல!'' என்று சொன்னார். சமீபத்தில் 'எங்கேயும் எப்போதும்’, 'வழக்கு எண் 18/9’ படங்களைப் பார்த்திருக்கிறார்.
தமிழகத்தில் ஃபேஸ்புக் பிரபலமாவதற்கு முன் அதில் அதிதீவிரமாக இயங்கிவந்தவர். இப்போது அவருடைய நண்பர்களுக்கு மட்டும் தெரிந்த ஐ.டி-யில் இருக்கிறார். அதிலும் அவ்வளவு ஆக்டிவ்வாக இல்லை.
இப்போது பிடித்த ஹீரோ தனுஷ். 'ரியலிஸ்டிக் ஆக்டர்’ என்பார்.
எப்போதும் பிடித்த ஹீரோ - ஹீரோயின்: அரவிந்த்சாமி - ரேவதி.
நெருங்கிய நண்பர்கள்: பி.சி.ஸ்ரீராம் (வாடா, போடா நெருக்கம்!) ஜெயேந்திரா, சங்கர்சுந்தரம்.
படத்தின் வசனங்களைப் போலத்தான் அவருடைய பேச்சும் இருக்கும். எல்லாவற்றுக்கும் புன்னகைதான். கோபமாக இருந்தால் 'மடப் பயலே’, 'புத்திசாலித்தனமாப் பேசாதே’ என்பார். அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை... 'ஃபாஸ்ட்... ஃபாஸ்ட்!

No comments: