Monday, January 28, 2013

Vairamuthu Answers - From Vikatan

''மணிரத்னம் ஏ.ஆர்.ரஹ்மான் வைரமுத்து கூட்டணி எப்போதும் வெற்றி பெற என்ன காரணம்?''

''முதல் சந்திப்பிலேயே ஒரு முடிவெடுப்போம். படத்தின் சிறந்த பாடல் எதுவென்று கருதுகிறோமோ, அதை எழுதி ஒலிப்பதிவு செய்துவிடுவோம். அடுத்து எழுதவிருக்கும் பாடல்கள் அந்தப் பாடலைத் தாண்ட வேண்டும் என்று பாடுபடுவோம். சிறந்த பாடல் என்று கருதப்பட்ட முதல் பாடலை அடுத்தடுத்த பாடல்களால் கடைசிக்குத் தள்ளக் கடும் முயற்சி மேற்கொள்வோம். 'கடல்’ படத்தில் இடம்பெற்று இன்று உலகப்புகழ் பெற்றிருக்கும் 'நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்’ பாடலைவிடவும் மிச்சப் பாடல்கள் உச்சப் பாடல்களாக உணரப்படும்; சற்றே காத்திருங் கள்.''

''ஒவ்வொரு சமூக நிகழ்வின் மீதும் உங்கள் கருத்து என்ன என்பதை அறிந்துகொள்ள ஒரு கணிசமான கூட்டம் காத்தி ருக்கிறது. நீங்கள் மௌனம் சாதிக்கிறீர்களே ஏன்?''
'' 'ஒரு கருத்தைச் சொல்ல ஒரு சொல் போதுமெனும்போது இரு சொற்களைப் பயன்படுத்தாதே. அந்தக் கருத்தால் ஒரு பயனும் இல்லையெனும்போது அந்த ஒரு சொல்லையும் விரயம் செய்யாதே.’
சொன்னவர் - சீன அறிஞர் சிங்சௌ.
வாழ்பவன் வைரமுத்து.''

No comments: