Saturday, May 16, 2020

ஹிட்லர் நம்பிய அந்த இரண்டு பேர்! - சர்வாதிகாரியின் காதல் பக்கம்

சிறு வயதிலிருந்தே விலங்குகளின்மீது தனி ஆர்வமும் பாசமும் கொண்டிருந்திருக்கிறார், ஹிட்லர். அதிலும் நாய்களின்மீது அவருக்கு தனி பிரியம் உண்டு.

ஈவா...

ஹிட்லரின் காதலிகளுள் ஒருவராக இருந்து, மரணத்திற்கு சில மணி நேரங்கள் முன்பு மனைவி என்ற அங்கீகாரத்தைப் பெற்றவர்.
பிளாண்டி...

அது, ஹிட்லரின் செல்ல நாய். ஜெர்மன் ஷெப்பர்ட் வகையைச் சேர்ந்த ஒரு பெண் நாய்.

சிறு வயதிலிருந்தே விலங்குகளின்மீது தனி ஆர்வமும் பாசமும் கொண்டிருந்திருக்கிறார், ஹிட்லர். அதிலும் நாய்களின்மீது அவருக்கு தனி பிரியம் உண்டு.

பல நாய்களை அவர் வளர்த்திருந்தாலும், பிளாண்டி வரலாற்றில் இடம் பிடித்த காரணம் என்ன?

ஹிட்லரின் நாஜிப்படை வீரர்களுள் ஒருவர், 1941 ஆண்டு, ஒரு அழகான நாய்க்குட்டியை ஹிட்லருக்குப் பரிசாக வழங்கினார். ஒரு வயதே ஆன அந்த நாய்க்குட்டியைப் பார்த்தவுடன் ஹிட்லருக்கு பிடித்துப்போனது. நாய்க்குட்டியும் வால் ஆட்டியபடியே ஹிட்லரிடம் ஒட்டிக்கொள்ள, குழந்தையைப் போல உற்சாகம் அடைந்தார். நாய்க்குட்டிக்கு பிளாண்டி எனப் பெயரிட்டார். அன்றிலிருந்து ஹிட்லரின் நம்பிக்கையான பாதுகாவலனாக மாறியது பிளாண்டி.

ஈவாவைத் தவிர, ஹிட்லரின் படுக்கை அறையினுள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. ஆனால், பிளாண்டியை ஹிட்லர் அனுமதித்தார். நாள் முழுக்க ஹிட்லரின் அருகில் இருக்கும் பிளாண்டி, அவர் தூங்கும் நேரத்திலும் அருகிலேயே இருந்தது.
பிளாண்டியைப் பராமரிக்க மட்டுமே ஒரு தனி நபரை வேலைக்கு அமர்த்தினார் ஹிட்லர். பிளாண்டி விளையாட அதே ஜெர்மன் ஷெப்பர்ட் வகையைச் சார்ந்த ஒரு நாயை ஏற்பாடுசெய்தார். அதற்கு, பெல்லா எனப் பெயரிட்டார்

1945-ம் ஆண்டு,
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வர இன்னும் குறுகிய நாள்களே இருந்தன. நண்பர் முசோலினியின் படுகொலை ஹிட்லருக்கு அதிர்ச்சியைத் தந்தது.
சோவியத் ராணுவம் தன்னை நெருங்கிவிட்ட செய்தியை அறிந்தார் ஹிட்லர். எதிரிகளிடம் சிக்கினால், தான் உட்பட அனைவரும் பல சித்ரவதைகளையும், கொடுமைகளையும் அனுபவிக்க நேரிடும் என ஹிட்லருக்கு நன்றாகவே தெரியும்.
தன் பணியாளர்கள் அனைவரையும் அழைத்து, 'எதிரிகளிடமிருந்து எப்படியாவது தப்பித்துவிடுங்கள், உடனே இங்கிருந்து புறப்படுங்கள்' என ஆணையிட்டார்.
பெர்லினில் அமைக்கப்பட்ட பதுங்குகுழி ஒன்றுக்கு இடம் பெயர்ந்தார் ஹிட்லர். பிளாண்டியும் வழக்கம் போல வாலாட்டியபடியே அவருக்குப் பின்னால் ஓடியது.

1945 ஏப்ரல் 29..
ஹிட்லருக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அந்தப் பதுங்கு குழியில் இருந்தனர். ஹிட்லரின் பிரத்யேக மருத்துவர் வெர்னர் ஹசியும் அதில் ஒருவர்.
தற்கொலை செய்துகொள்வதற்கான 'சயனைடு கேப்ஸ்யூல்கள்' ஹிட்லரின் மேசைக்கு வந்து சேர்ந்தன. ஹிட்லர் அவற்றை உற்று நோக்கினார். விஷத்தின் வீரியத்தை சோதிக்க விரும்பினார்.
ஆனால் யாரிடம் சோதிப்பது?
மருத்துவர் வெர்னரை திரும்பிப் பார்த்தார் ஹிட்லர். ஹிட்லரின் பார்வை வெர்னருக்குப் புரிந்தது. வெளியே உலாவிக்கொண்டிருந்த பிளாண்டி, ஹிட்லரின் அறைக்குள் அழைத்து வரப்பட்டது.
ஏதுமறியா அப்பாவியான பிளாண்டி, தனது முன்னங்கால்களை மேலே உயர்த்தி ஹிட்லரைப் பார்த்துக் குழைந்தது.
பிளாண்டியின் முகத்தை ஹிட்லர் பார்க்கவில்லை அல்லது பார்க்கத் துணிவில்லை. கை அசைத்துவிட்டு அருகில் இருந்த வேறு ஒரு அறைக்குச் சென்றுவிட்டார்.
பிளாண்டியின் வாய்க்குள் சயனைடு கேப்ஸ்யூல் திணிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியும், நான்கு கால்களைப் பலமாக அசைத்தவாறும் செத்து மடிந்தது.
ஹிட்லருக்கு பிளாண்டி இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட ஹிட்லர், தன் அறையின் கதவை சிறிது நேரம் அடைக்கச் சொன்னார். வெற்று முகத்துடன் அந்த அறையில் தனியாக அமர்ந்திருந்தார்.
பிளாண்டி இறந்த அடுத்த நாள் (ஏப்ரல் 30), உலகின் மாபெரும் சர்வாதிகாரியான ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார்.
பல கோடி யூத மக்களைக் கொன்றுகுவித்து, அதன்மூலம் ஆனந்தமடைந்த ஹிட்லர், சிதைந்த ஒரு உயிருக்காகக் கலங்கியது, வரலாற்றில் பிளாண்டிக்காக மட்டுமே இருக்கும்.

Wolf Messing

Messing was born in the village of Góra Kalwaria, 25 km southeast of Warsaw, at a time when Poland was a territory of the Russian Empire. He claimed that his psychic abilities developed in his early life.[1] By the time he was a teenager he was performing for the public.[1] According to Messing, he was able to broadcast mental suggestions in order to alter people's perceptions. In the interview to the P. Oreshkin, Messing said:
... It's not mind-reading, it's, like the "reading of muscles" ... When human thinks hard about something, the brain cells transmit impulses to all muscles of the body. Their movements, invisible to the eye, I can easily feel. ... Often I'm performing mental tasks without direct contact with the inductor. The pointer to me here is the breathing frequency of inductor, the beating of his heart, voice timbre, his walking nature etc.[2]
He died in hospital, on 8 November 1974. He had successful surgery on the femoral and iliac arteries, but for some unknown reason death occurred in a couple of days, after kidney failure and pulmonary edema. He was buried at the "Vostryakovskoe" Jewish cemetery in Moscow.

Wednesday, February 05, 2020

பெரியகோயிலை கட்டச்சொன்ன ராஜராஜன் தெரியும்; கட்டிய குஞ்சர மல்லனைத் தெரியுமா?

விரிந்து பரந்திருந்த சோழப் பேரரசின் எஞ்சிய அடையாளமான பெரியகோயிலைக் கட்டிய ராஜராஜனை இப்போது நாம் கொண்டாடுகிறோம். ஆனால், சுமார் 100 வருடங்களுக்கு முன்பு வரை ராஜராஜன்தான் பெரிய கோயிலைக் கட்டினார் என்பதே உலகத்துக்குத் தெரியாது. அதற்கு முன்பு, கரிகால் சோழன்தான் இதைக் கட்டினார், காடுவெட்டிச் சோழன் என்பவர்தான் கட்டினார், பூதங்கள் வந்து கட்டின என எக்கச்சக்க 'மித்'துகள். 1896-ல் ஜெர்மனைச் சேர்ந்த கல்வெட்டு அறிஞர் Hultz என்பவர்தான் முதன்முதலில் பெரியகோயிலின் கல்வெட்டுக்களை முழுமையாகப் படித்து இதைக் கட்டியவர் ராஜராஜ சோழன் என்று அறிவித்தார்.


  • நவீன தொழில்நுட்பங்கள் ஏதும் இல்லாத காலத்தில் இத்தனை பிரமாண்டமான கோயிலைக் கட்டிய தமிழ்க் கட்டுமான அறிவைத்தான் எல்லோருமே வியக்கின்றனர். இப்போது, ஒரு சிறிய வீடு கட்டவே முறுக்குக் கம்பிகள் தொடங்கி சிமென்ட் வரை பயன்படுத்துகிறோம். ஆனால், இத்தனை பிரமாண்ட கோயில், பாறைகளை ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கியே கட்டப்பட்டது. பூசுவதற்கு சாந்து பயன்படுத்தப்படவே இல்லை. அந்தப் பாறைகளில்கூட அத்தனை ஆச்சர்யங்கள். தஞ்சைப் பகுதியில் ஒரு சிறிய மலைக்குன்றுகூட இல்லை. கடந்த ஆயிரம் வருடங்களில், மலைக் குன்றுகள் இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்களும் இல்லை. அப்படி என்றால், கோயில் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்ட இத்தனை பிரமாண்டமான பாறைகள் எங்கிருந்து வந்தன? புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, குன்றாண்டார் கோயில் ஆகிய இரண்டு ஊர்களில் இருந்த மலைகளை உடைத்துப் பெயர்த்துக்கொண்டு வந்து கட்டப்பட்டதுதான் பெரியகோயில் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.


  • குஞ்சர மல்லன் என்பவர்தான் பெரியகோயிலைக் கட்டிய தலைமை கட்டடப் பொறியாளர். இவருக்கு, ராஜராஜப் பெருந்தச்சன் என்று பட்டம் கொடுத்திருக்கிறார், ராஜராஜன். கோயிலின் மற்ற வேலைகளைச் செய்தவர்களையும் சமமாகவே மதித்திருக்கிறார். கோயிலில் நாவிதராக வேலை பார்த்தவருக்குக் கொடுக்கப்பட்ட பட்டம், ராஜராஜப் பெரு நாவிதன்!


    • தாஜ்மஹால் உள்ளிட்ட நாட்டின் பல பிரமாண்ட கட்டுமானங்கள், அப்போதைய அரசர்களால் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களைக்கொண்டு கட்டப்பட்டன. ஆனால் பெரியகோயில், முழுக்க முழுக்க இறைப்பணியில் ஆர்வம் உள்ளவர்களைக் கொண்டு உருவானது!


  • கோயிலின் உருவாக்கத்துக்கு நிதியாக கொட்டிக் கொடுத்தவர்கள் முதல் ஒரே ஒரு செப்புக் காசு கொடுத்தவர் வரை அத்தனை பேர் பெயர்களையும், என் பெயருக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவத்துடன் கல்வெட்டில் குறிப்பிட வேண்டும் என்பது ராஜராஜன் பிறப்பித்த முதல் உத்தரவு. அனைவரது பெயர்களும் கல்வெட்டுக்களில் இருக்கின்றன


  • யார் கிளப்பிவிட்டது எனத் தெரியவில்லை, பெரியகோயிலின் கோபுர நிழல் தரையில் விழாது. அந்த அளவுக்கு நுணுக்கமாகக் கட்டப்பட்டிருக்கிறது என்று பலரும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். இதில் உண்மை இல்லை. 216 அடி உயரம்கொண்ட கோயில் விமானத்தின் நிழல் தரையில் விழும். அதுபோலவே உச்சியில் இருக்கும் கோபுரம் ஒரே கல்லில் செய்யப்பட்டது என்பதும் தவறானது. கோயிலின் ஒரு பக்கத்தில் தொப்பி அணிந்த நிலையில் ஒரே ஒரு வெள்ளைக்காரரின் உருவம் பதிக்கப்பட்டிருக்கும். இதை வைத்து ஏராளமான கதைகள் உண்டு. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வரவே இல்லை. அப்புறம் எப்படி? பின்னால் வரப்போகிறார்கள் என்பதை முன்னரே தீர்க்கதரிசனமாகச் சொல்லியிருக்கிறார்கள் அல்லது அப்போதே தமிழர்கள் மேற்கு நாடுகளுடன் கடல்வழித் தொடர்பைக் கொண்டிருந்தார்கள் என்று பலவித கருத்துகள். எதுவுமே உண்மை இல்லை. ராஜராஜனுக்குப் பிறகு, 1620-ல் தஞ்சாவூரை நாயக்கர்கள் ஆண்டபோது, டேனிஷ் நாட்டு வெள்ளையர்களுடன் வியாபார உறவு வைத்திருந்தார்கள். அவர்களை மரியாதைசெய்ய ,பெரியகோயிலில் நாயக்கர்களால் பொறிக்கப்பட்டதுதான் அந்த உருவம்!

    • பெரியகோயிலின் நிஜப் பிரமாண்ட பெருமை வேறு. பிரகதீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே இருக்கும் லிங்கத்தின் பீடம், 3 அடி உயரமும் 55 அடி சுற்றளவும், 6 அடிக்கு கோமுகமும்கொண்டது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த விஸ்வரூபப் பீடத்தைச் செய்வதற்கு, குறைந்தபட்சம் 500 டன் எடையுள்ள பாறையை மலையிலிருந்து வெட்டி, நகர்த்திக் கொண்டுவந்திருக்க வேண்டும்! 


    • சோழர் காலம் தொடங்கி, விஜயநகரப் பேரரசு, நாயக்கர் காலம், மராட்டிய ஆட்சிக் காலம், ஆங்கிலேயர்களின் காலம் எனக் கடந்த 1000 வருட இந்திய ஓவியங்கள் அனைத்தும் பெரிய கோயிலில் உண்டு. இந்தியாவில் வேறு எங்கும் இப்படி ஓர் ஓவிய சங்கமத்தைக் காண முடியாது!

Sunday, June 16, 2019

சோழ மண்டலக் கடல் என்பதே சரி!!!

`இந்தியாவிற்கு வருகை தந்த அனைத்து ஐரோப்பியர்களாலும் சோழமண்டலக் கடல் என்றே நமது கடல் அழைக்கப்பட்டது. சோழர்களின் பெருமையும் அவர்களது கடல் ஆளுமையும் உலகம் அறிந்த ஒன்று!


வங்காள விரிகுடாவை 'சோழமண்டலக் கடல்' என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

பூமிப் பரப்பில் 70% கடலால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்கிறது அறிவியல். உலக அளவில் அதே விகிதத்தில் மக்கள் கடற்கரை ஓரங்களில் வசிப்பதாக ஆய்வுகள் கூறும் நிலையில், மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்குமான ஆக்சிஜன் தேவைகளில் 70% கடல்வாழ் தாவாரங்கள்தான் பூர்த்தி செய்கிறது.

1856-ல் வெளியிடப்பட்ட ஆங்கிலேயே வரைபடம்:


சுமார் 170 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கடல்கள் தோன்றியிருக்கலாம் என்று கூறும் இன்றைய அறிவியல், அன்றைய காலகட்டத்தில் நில அமைப்பு துண்டிடப்படாததாகவும் பெருங்கடலாகவும் இருந்திருக்கிறது 361,740,000 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட உலகக் கடல் அட்லான்டிக், பசிபிக், இந்தியன், ஆர்டிக் என 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் 166,240,000 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட பசிபிக் பெருங்கடல் மட்டும் உலக நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியினை நீரால் சூழ்ந்திருக்கிறது. அதை ஒரே நேர்க்கோட்டில் நீட்டிப் பார்த்தோமென்றால் சுமார் 17,700 கிலோமீட்டர் அதாவது உலக நிலப்பரப்பில் பாதி அளவைத் தொடும். அதேபோல உலகின் மூன்றாவது பெரிய கடலாகவும், வெப்பமண்டலக் கடலாகவும் விளங்குவது 73,430,000 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்தியப் பெருங்கடல்தான்.

1761-ல் வெளியிடப்பட்ட ஆங்கிலேய வரைபடம்:

மேலும் உலகக் கடல்களின் தனிச்சிறப்புடைய இயற்கைத் தகவமைப்பினை தன்னகத்தேக் கொண்டிருக்கிறது. சிறிய கடல்களின் பெயர்களை ஒருங்கிணைத்தே பெருங்கடல் எனக் குறிப்பிட்டு வருகிறோம். அதன்படி அரபி மற்றும் வங்காள விரிகுடாக் கடல்கள் இந்தியப் பெருங்கடலில்தான் அடக்கம். இந்தியப் பெருங்கடல் என்பது குமரிக்கடலைத்தான் குறித்தது.  

1790 பிரெஞ்சு வரைபடம்:
``வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரி முனை பாப்பா,
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் – இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா                          
என்று இந்திய எல்லைகளை வரையறை செய்கின்றார் பாரதியார். தமிழ் மக்கள் கடல்களைப் பற்றிய ஆழமான அறிவுடையவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள் என்பதற்குச் சங்க இலக்கியப் பாடல்களே சாட்சி. கடல் என்ற சொல்லாட்சி அவற்றில் பரவிக் கிடக்கிறது. கடலைக் குறிக்கும் ஆழி என்ற சொல் சங்க இலக்கியத்தில் 43 இடங்களில் வருகின்றது. கடல் சார்ந்த நிலம் நெய்தல் என்றும் அங்கு வாழ்ந்த மக்கள் குறித்தும் ஏராளமான செய்திகள் தமிழில் விரவிக்கிடக்கின்றன. இந்தியக் கடலைக் கட்டியாண்ட பெருமை முடியுடை மூவேந்தர்களையே சாரும். இந்தியாவிற்கு வருகை தந்த அனைத்து ஐரோப்பியர்களாலும் சோழமண்டலக் கடல் என்றே நமது கடல் அழைக்கப்பட்டது. சோழர்களின் பெருமையும், அவர்களது கடல் ஆளுமையும் உலகம் அறிந்த ஒன்று. சோழர்களின் கடல் ஆளுமைப் பெருமையை எண்ணி வியந்துதான் தற்போதைய இந்திய அரசு 2015-ல் இராசேந்திர சோழனுக்கு அஞ்சல் தலையை வெளியிட்டது.
சுமார் 2,172,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டதாகச் சொல்லப்படும் வங்காள விரிகுடா தனக்குள் சோழமண்டலக் கடலையும் அடக்கிக் கொள்கின்றது. மற்றபடி சோழமண்டலக் கடலுக்கும் வங்காள விரிகுடாவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் வங்க மொழி என்ற சொல்லை `இடியமா பெங்கல்லா’ என்று போர்த்துக்கீசியர்கள் அழைத்தனர். முகமதிய ஆட்சியின்போதுதான் இந்தச் சொல் முதன்முதலில் வருகிறது. 16-ம் நூற்றாண்டில் வங்க மொழியை கெளட மொழி என்றே அழைத்தனர். வங்காள மொழி பேசுவதன் அடிப்படையிலேயே வங்காளதேசம் என்று அழைக்கப்பட்டது. பாகிஸ்தானிடமிருந்து பிரிந்து தனி நாடாக உருவாகியிருக்கும் வங்கதேசம்தான் முந்தைய இந்தியாவில் கிழக்கு வங்கமாக இருந்தது.
வங்கதேசப் பகுதியில் தொடங்கி இந்தியாவின் மேற்கு வங்கம் வரை பரந்திருக்கும் குடாப் பகுதியே விரிகுடா எனப்படுகிறது. இந்தப் பகுதியில்தான் கங்கை, பிரம்மபுத்திரா, ஐராவதி, மகாநதி போன்ற பெரிய ஆறுகள் கலக்கின்றன. இதை வங்காள விரிகுடா என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அளவில் சிறியதான குடா வளைகுடா (Gulf) என்றும், பெரிய அளவிலான பகுதி விரிகுடா (Bay) என்றும் பெயர் பெற்றதோடு அப்படியே அழைக்கப்பட்டது. பரப்பளவில் சிறியதான மன்னார் வளைகுடாவையும், பெரியதான வங்காள விரிகுடாவையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். நமது சோழமண்டலத்தை ஐரோப்பியர்கள் கோரமண்டல் (Coromandel) என்றே அழைத்தார்கள்.
29 கடல்களையும் 4 பெருங்கடல்களையும் கொண்ட இப்புவிப் பரப்பில் சோழமண்டலக் கடலுக்கென்று மிகப்பெரிய வரலாறு உண்டு. அந்த வரலாற்றைப் போலவே இந்தியாவின் மேற்கிலும், மலையாளக் கரை அல்லது மலைவாரக் கடல் என்ற சொற்கள் எப்படி அரபிக் கடலாக ஆகும் என்ற கேள்வியினை அரசுகள் எண்ணிப்பார்க்க வேண்டும். கோதாவரி ஆறு கலக்குமிடம் தொடங்கி இலங்கையின் மன்னார் வரையுள்ள கடல் பரப்பு சோழமண்டலக் கடலுக்கான பெயருக்குரியது.

Sunday, January 13, 2019

போஜ்புர் !!!

போஜ்புர் என்பதும் போபால் அருகில் உள்ள சிற்றூர். ராஜா போஜன் நம்மூர் ராஜராஜ சோழன், மகேந்திரப் பல்லவன் இருவருடைய கலவை. சமராங்கன சூத்ரதாரா என்ற கட்டட, சிற்ப நூலை எழுதியவன். போஜ்புரில் மாபெரும் சிவன் கோயிலை எழுப்ப முனைந்தான். கட்டி நின்றிருந்தால் தஞ்சைப் பெரியகோயிலைப் போல் இருமடங்கு உயரம் இருந்திருக்கும். இக்கோயிலின் வடிவ வரைபடம் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. விழுந்துகிடந்த அடிப்பகுதியை இந்திய தொல்லியல் துறை நன்றாக எழுப்பியுள்ளனர்.
பிரம்மாண்டம்.
சிவலிங்கம் இந்தியாவிலேயே மிகப் பெரியது.



ஏலியன் சிக்னல்களும், தொடர் குழப்பங்களும்!

சில நாள்களாகப் புரிந்துகொள்ள முடியாத ரேடியோ சிக்னல்கள் பூமிக்கு வந்துகொண்டே இருப்பதும் அடக்கம். இப்போது மறுபடியும் மக்கள் மத்தியில் ஏலியன்கள் பற்றிய பேச்சு வருவதற்குக் காரணமும் விண்வெளியில் நமக்குக் கிடைத்த அந்த சிக்னல்களே.

மிளிரும் ஒளிகளும், அலரும் ரேடியோக்களும் ஏதோவொரு தகவலைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், அந்தத் தகவல் என்னவென்பதைத்தான் இன்னமும் கண்டுபிடிக்க இயலவில்லை. அந்த சிக்னல்கள் தொலைதூர நட்சத்திரங்களின் நுண்ணலைகளில் இருந்து கிடைத்துள்ளன. பலவும் கருந்துளைகளிலிருந்து கிடைத்துள்ளன. உலகளவில் இந்த சிக்னல்கள் விஞ்ஞானிகளைக் குழப்புகின்றன. தங்களிடமுள்ள சாதனங்களை வைத்து அவற்றைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். அதிநுட்பமான அந்த சிக்னல்கள் சில மில்லி விநாடிகளே வந்துவிட்டுச் செல்கின்றன. ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அவை பலகோடி ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலிருந்து வந்துள்ளன. ஆனால், அவை எப்படி வந்தன, யாராவது அனுப்பினார்களா போன்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை.
இந்த மர்மங்களுக்கு விடைகாண வேண்டுமெனில் நமக்குக் கிடைத்த ரேடியோ சிக்னல்கள் சொல்லும் செய்திகளைக் கண்டுபிடித்தாக வேண்டும். இதேபோல் 2007-ம் ஆண்டும் சிக்னல்கள் கிடைத்தன. அப்போது வெறும் அறுபது சிக்னல்களே வந்தன. இப்போது சிக்னல்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகின்றது. இன்னமும் வந்துகொண்டே இருக்கின்றன. நேச்சர் (Nature) என்ற ஆய்வுப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வறிக்கை கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் விண்வெளியிலிருந்து புதிதாகப் பதின்மூன்று ரேடியோ சிக்னல்கள் கிடைத்திருப்பதாகப் பதிவுசெய்துள்ளனர். அவற்றில் ஏழு, அதிக அலைவரிசை கொண்டவை. அதாவது நானூறு மெகா ஹெர்ட்ஸ்க்கும் அதிகமாக இருந்துள்ளன. 

இவை அடிக்கடி விட்டுவிட்டு வந்துகொண்டே இருக்கின்றன. பிரிட்டிஷ் கொலம்பியா மலையில் இருக்கும் கனடாவின் தேசிய ரேடியோ விண்வெளி ஆய்வகத்தில் தொடர்ச்சியாகப் பதிவாகும் ஒரே மாதிரியான சிக்னல்களைப் பதிவு செய்துள்ளார்கள். அந்தத் தொடர் சிக்னல்களை ஆய்வுசெய்து, அவை எங்கிருந்து வந்தன, எப்படி வந்தன என்பதுபோன்ற தகவல்களைத் திரட்ட விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
இதுவரை நடந்த ஆராய்ச்சிகள், சில முடிவுகளுக்கு விஞ்ஞானிகளைக் கொண்டு வந்துள்ளன. சூப்பர் நோவா என்னும் பெருஞ்சூரியனிலிருந்து வெளியான மிச்சங்களுடைய சிக்னல்களாக இருக்கலாம். இல்லையேல் அளவில் மிகப்பெரிய கருந்துளைகளில் உருவான வெடிப்பு நிகழ்வு ஏதாவதொன்றில் கடுமையான கதிர்வீச்சுகள் வெளியாகியிருக்கலாம். அதுகூட நமக்குக் கிடைத்திருக்கலாம் என்கிறார்கள்.
இது ஏலியன்களால் அனுப்பப்பட்ட சிக்னல்கள்தாம். இவை செயற்கையாக அனுப்பப்பட்டவையே என்பதுபோன்ற முடிவுகளுக்கு நாமே வரக்கூடாது" என்கிறார் விண்வெளி இயற்பியலாளரான ஏவி லோப் (Avi Loeb). 
கடந்த இரண்டு மாதங்களில் நமக்குக் கிடைத்துள்ள இந்தப் புதிய சிக்னல்கள், ஏலியன் புதிருக்கு விடைதேடும் விஞ்ஞானிகளின் பயணத்துக்கு முன்பைவிட அதிகம் பயனுள்ளதாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். கிடைத்துள்ள அனைத்துமே சுமார் ஒன்றரை பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தே கிடைத்துள்ளன. இப்படியாக ஒரே இடத்திலிருந்து தொடர்ச்சியாக வருவதால் அவை எங்கிருந்து வருகின்றன, எப்படி வருகின்றன போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பது விரைவில் எளிதாகிவிடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பெரும்பாலான விஞ்ஞானிகள், தொலைவில் ஏதாவது நட்சத்திர வெடிப்பு நிகழ்வு நடந்திருக்கலாம் என்றும் அவற்றிலிருந்து வெளியான கதிர்வீச்சுகளே நமக்கு இப்படியான சிக்னல்களாகக் கிடைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இந்த ஆய்வின் முடிவில் வழக்கம்போல் ஏதேனும் இயற்கை நிகழ்வாக இருக்கலாம் அல்லது உண்மையிலேயே ஏலியன்கள் அனுப்பிய சிக்னலாகவும் இருக்கலாம். எப்படியிருந்தாலும் விண்வெளி ஆராய்ச்சிகளில் மைல்கல்லாக நின்ற நம்மோடு வாழ்ந்த சமகால மேதாவி ஒருவர் சொன்னதை நாம் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.
``ஏலியன்கள் பூமிக்கு வரவேண்டுமென்று நாம் ஆசைப்படுவது ஆபத்தானது. அவர்கள் வருவது அமெரிக்காவுக்குச் சென்ற கொலம்பஸ் கதையாகப் போகத்தான் வாய்ப்புகள் அதிகம். அவர் அங்கு கால் வைத்தது அப்பகுதியின் சொந்தக்காரர்களான பூர்வகுடி அமெரிக்கர்களுக்கு நல்லது செய்யவில்லை. அப்படித்தான் நம் உலகில் ஏலியன்களின் வருகையும் அமையும்"
இதைச் சொன்னது யார் தெரியுமா? புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். வேற்றுக்கிரகவாசிகளைத் தேடி நாம் சிக்னல் அனுப்புவது அவ்வளவு நல்லதல்ல என்று அவர் எச்சரித்தார். அது மனித இனத்தின் இருப்பையே ஆபத்துக்கு உள்ளாக்கும் வாய்ப்புகள்தாம் அதிகம். தொலைதூரத்திலிருந்து வருபவர்கள் என்ன நோக்கத்தில் வருவார்கள் என்பது நமக்குத் தெரியாது. அதுமட்டுமல்ல. நம் சிக்னல்களைக் கண்டுபிடித்து நம் உலகுக்கு அவர்களால் வரமுடிந்தது என்றால், அவர்கள் நம்மைவிடத் தொழில்நுட்பங்களில் பல மடங்கு முன்னேறியவர்களாகவே இருப்பார்கள். அப்படியொரு கூட்டத்தை எதிர்த்து நிற்கும் அளவுக்கு நாம் இன்னமும் வளரவில்லை. அப்படிச் செய்வது ஆபத்தை வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்பதற்குச் சமம் என்றார் ஹாக்கிங்.
பூமியின் வளங்கள் ஏற்கெனவே குறைந்து கொண்டிருக்கின்றன. இங்கு வாழ்பவர்களுக்கே பற்றாக்குறை ஏற்பட்டுக்கொண்டிருக்க, புதிதாக வருபவர்கள் இப்படிப்பட்ட பற்றாக்குறையான உலகை எப்படிப் பார்ப்பார்கள் என்பது நமக்குத் தெரியாது. இதே நிலைதான் பேரண்டத்தின் எந்தப் பகுதியில் எந்த வகை நாகரிகம் வாழ்ந்தாலும் இருக்குமென்று நினைக்கிறேன். இயற்கை ஓரளவுக்குத்தானே கொடுத்திருக்கிறது. அந்த அளவு எப்போதோ எல்லை மீறியிருக்க மற்ற கிரகங்களில் மட்டும் அப்படியே வைத்திருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றவில்லை. அப்படிப்பட்டவர்கள் இங்கு வரும்போது நம்மைப் போலவே, மனிதர்கள் மற்ற நாடுகளில் கிடைப்பதைச் சுரண்ட நினைப்பது போலவே அவர்களும் நினைக்க மாட்டார்களென்று என்ன நிச்சயம்? அப்படியொரு சூழல் வரக்கூடாது என்றுதான் ஹாக்கிங் விரும்பினார். அனைத்து ஆராய்ச்சிகளும் அந்த மேதையின் கருத்தை நோக்கியதாகவே இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.

Friday, December 14, 2018

'நாஸ்ட்ராடாமஸ்' - இன்று வரை நீடிக்கும் ஆச்சர்யம்

1503-ம் ஆண்டு டிசம்பர் 14 அன்று, பிரான்ஸில் பிறந்தார் நாஸ்ட்ராடாமஸ். சட்டப் படிப்புக்கு பாதியிலே முழுக்குப் போட்டுவிட்டு மருத்துவம் பயின்றார். மருத்துவம் படித்தபோதும்  ஜோதிடத்தின் மீதுதான் நஸ்ட்ராடாமஸுக்கு ஈர்ப்பு . தனது வீட்டின் மேல்தளத்தை  ஜோதிடம் சார்ந்த ஆய்வுகளுக்கு ஏற்ப வடிவமைத்தார். அங்குதான் தனக்குத் தோன்றியவற்றை 'Almanac' (பஞ்சாங்கம்) வடிவத்தில் வெளியிட ஆரம்பித்தார். 1540-களில், நாஸ்ட்ராடாமஸ் வெளியீடுகள் நிகழ்ந்து, நல்ல வரவேற்பைப் பெற பிரான்ஸைக் கடந்தும் புகழ் பரவியது. 
உலகின் தலையெழுத்து 100 :

பைபிளுக்குப் பிறகு அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, அதிக மக்களால் கவனம்பெற்ற நூல் நாஸ்ட்ராடாமஸ் எழுதிய 'The Centuries' (The Prophesies). பிரெஞ்சு புரட்சி,நெப்போலியன்,முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர்,ஹிட்லர், முசோலினி, லேடன் என உலகில் நடந்த பல முக்கியச் சம்பவங்களை 1550-களிலேயே தனது செஞ்சுரியில் தொகுத்துக் கணித்து வைத்துவிட்டார்.  நடந்தது, இன்னும் நடக்கப்போவது என்று நாஸ்ட்ராடாமஸ் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆக, ஒவ்வொரு நிகழ்வின் மீதுதான செஞ்சுரியின் கணிப்புகளை அதிசயமாகவும், அதிர்ச்சியாகவும் உலகம் கண்டுவருகிறது. 1568ல் அச்சான மூலப் பிரதியிலிருந்து எழுத்துப்பிழைகள், சொற்பிழைகள், எழுதுபவர்களின் கண்ணோட்டம் என்று செஞ்சுரிகுறித்த சந்தேகங்கள் தொடர்ந்தவாறே உள்ளன. யாரும் தவறாகப் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காகப் பலவற்றை குறியீடுகளாகவும், புதிராகவும் நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஒரு சம்பவத்தைப் பற்றிய உறுதிப்பாடு என்பது இதில் அவசியமாகிறது.
மிருகங்கள், மிகுந்த பசியுடன் ஆற்றைக் கடக்கின்றன. 
போர் அவனுக்கு பாதகமாகவே அமையும். 
ஜெர்மனி குமாரன் சட்டத்தை அறியமாட்டான். 
சிறப்புமிக்க ஒருவனை கூண்டிலடைப்பான்'. [||.24]
இந்த வரிகள், ஜெர்மனி குமாரன் என்றே குறிப்பிட்டுள்ளதால், நிகழ்வுகளின் அடிப்படையில் இவை ஹிட்லரைப் பற்றிய அறிவிப்பு என அறியலாம். இதுபோல், தனது அறிவிப்புகளில் இடம்,மாதம் போன்றவற்றை நாஸ்ட்ராடாமஸ் நுணுக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில்,சில மேம்போக்கான அறிவிப்புகள் எழுத்தாளர்களின் எண்ணத்திற்கேற்ப பொருள்கொள்ளப்படுகிறது. 
'மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட பகுதியில், ஒரு சிறந்த மனிதன் பிறப்பான். அவனுடைய புகழ்,ஆட்சி,மரியாதையெல்லாம் ஓங்கி நிற்கும்.வளர்பிறை சந்திரன்போல் அவனுடைய சிறப்புகள் பெருகி தரையிலும்,கடலிலும் பிரகாசித்திருப்பான். அவன் சுழன்றடிக்கும் காற்றோடு பொழிகின்ற மழையைப்போல் உலகமெங்கும் சுற்றிவருவான்'. [| - 50]
மூன்று பக்கம் கடல் என்பதால், இது தென்னிந்தியாவைத்தான் குறிக்கிறது என்று அவரவர் அபிமானிகள் தங்கள் தலைவனை மார்தட்டிக்கொள்கிறார்கள். உண்மை, நாஸ்ட்ராடாமஸுக்கே வெளிச்சம். எது எப்படியோ, நாஸ்ட்ராடாமஸ் சொல்வதெல்லாம் நடக்கிறது. அவர் உடல் குறித்தான ஆய்வுகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை என்ற கேள்விக்கான பதிலும் மர்மமாகவே உள்ளது

Sunday, December 02, 2018

176 வயதான தாமிரபரணி பாலம்

நெல்லையின் அடையாளங்களில் ஒன்றாக தாமிரபரணி பாலம் திகழ்கிறது. லண்டனின் தேம்ஸ் நதியில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தின் வடிவில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. சுலோச்சன முதலியார் என்ற தனி மனிதரின் கொடையால் கட்டப்பட்ட இந்தப் பாலம், 176 ஆண்டுகளைக் கடந்தும் உறுதி குலையாமல் உள்ளது.
ரசு கட்டுமானங்கள் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். சில இடங்களில் லட்சங்களைக் கொட்டி  போடப்பட்ட பாலங்கள், ஓராண்டுக்குள்ளாகவே சரிந்து விழுந்த சோகத்தைப் பார்த்தும், கேள்விப்பட்டும் இருக்கிறோம். ஆனால், 176 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட ஒரு பாலம், இப்போதும் சிறிதும் உறுதிகுலையாமல் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. நெல்லையில் வாழ்ந்த தனி நபர் ஒருவர், தன் சொத்துகளையும் மனைவியின் நகைகளையும் விற்று ஆற்றிலே கொட்டி அந்தப் பாலத்தைக் கட்டியிருக்கிறார். அது, பல ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது. அந்த மாமனிதரின் பெயர் சுலோச்சன முதலியார். அவரது மனைவி வடிவாம்பாள்!
நெல்லை, பாளையங்கோட்டை ஆகிய இரட்டை நகரங்களைப் பிரிப்பது தாமிரபரணி நதி. கடந்த இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு அணைகள் எதுவும் கட்டப்படாத நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால், தாமிரபரணி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது. ஏப்ரல், மே மாதங்கள் தவிர எஞ்சிய 10 மாதங்களிலும் இந்த ஆற்றில் வெள்ளம் சீறிப் பாய்ந்து ஓடியிருக்கிறது.

அப்போது, தாமிரபரணி ஆற்றில் பாலம் இல்லாததால் பரிசல்களை நம்பியே மக்கள் பயணம் செய்திருக்கிறார்கள். அல்லது நீந்திக் கரைசேர வேண்டும். வசதிபடைத்தவர்கள் கட்டணம் செலுத்தி பரிசல்களில் சென்றிருக்கிறார்கள். வசதியற்றவர்கள் நீச்சல் அடித்துச் செல்ல வேண்டிய நிலை. காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டு ஓடிய தாமிரபரணி ஆற்றைக் கடக்க முயன்று உயிரை மாய்த்துக்கொண்டவர்கள் அனேகர். ஆர்வம் மிகுதியால் கரை சேர்ந்துவிடும் துணிச்சலுடன் ஆற்றில் இறங்கி, தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவர்களும் இளைஞர்களும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.  
ஆனாலும், நெல்லையில் உள்ள வர்த்தக மையங்களுக்குச் செல்லவும், விளைவித்த காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்யவும் ஆற்றைக் கடக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, பரிசல்களைப் பயன்படுத்தியே ஆகவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. குறைவான பரிசல்கள் மட்டுமே இயக்கப்பட்டதால், படகுத்துறையில் எப்போதும் கூட்டம் அலைமோதியபடியே இருந்திருக்கிறது. அவசரமாக அக்கரைக்குச் செல்ல விரும்புபவர்கள் வரிசையில் நிற்காமல், பரிசல்காரருக்கு கமிஷனாகக் கூடுதல் பணத்தைக் கொடுத்து பயணம் செய்திருக்கிறார்கள். வரிசையில் காத்திருப்பவர்களுக்கு இந்தச் செயல் கோபத்தை ஏற்படுத்தியதால், அடிக்கடி தாமிரபரணி படகுத்துறையில் குழப்பமும் தகராறும் ஏற்படுவதுண்டாம்.
செங்கல்பட்டு அருகேயுள்ள திருமணம் என்கிற சிறிய கிராமத்தில், செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் சுலோச்சன முதலியார். அவரது முன்னோர்கள் ஆங்கிலேயர்களுக்கு மொழி பெயர்ப்பாளர்களாக இருந்தவர்கள். சுலோச்சன முதலியாரின் தாத்தா, திருவனந்தபுரத்தில் நீதிபதியாகப் பணியாற்றியிருக்கிறார். அவரது தந்தை ராமலிங்க முதலியார், கட்டபொம்மனுக்கும் அவரது வழக்கை விசாரித்த ஆங்கிலேயே அதிகாரியான பானர்மேனுக்கும் மொழி பெயர்ப்பாளராகச் செயல்பட்டார். அதன் காரணமாகவே அவரது குடும்பம் நெல்லைக்குக் குடிவந்திருக்கிறது. 
சுலோச்சன முதலியாரிடம் செல்வமும் செல்வாக்கும் இருந்ததால், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவகத்துக்கு தினமும் சாரட் வண்டியில் வந்துசெல்வது வழக்கம். அவருக்கென அங்கு ஓர் அறை ஒதுக்கப்பட்டு இருந்துள்ளது. தாசில்தாருக்கு இணையான சிரஸ்தார் பொறுப்பில் அவர் இருந்துள்ளார். அரசு வேலையாகச் செய்யாமல், சம்பளம் பெறாமல் கெளரவ வேலையாகச் செய்திருக்கிறார். அவர் சாரட் வண்டியில் கம்பீரமாக வந்துசெல்வது குறித்து திருநெல்வேலி தொடர்பான குறிப்புகளில் எழுதப்பட்டிருக்கிறது. 
தாமிரபரணி ஆற்றின் கரையில் நடக்கும் குளறுபடிகளைத் தீர்க்கும் வகையில், அங்கே ஒரு பாலம் அமைக்க வேண்டும் என்பது அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த ஆர்.ஈடன் என்பவருக்குக் கனவாக இருந்தது. அதனால், இது தொடர்பாக 1836-ம் ஆண்டு ஆங்கிலேய தலைமையகமான லண்டனுக்குக் கடிதம் எழுதினார். ஆற்றில் பாலம் கட்டி பணத்தை வீணடிப்பதில் ஆங்கிலேய அரசுக்கு விருப்பமில்லை. அதனால் எந்தப் பதிலையும் அனுப்பவில்லை. 
இந்தச் சூழலில், நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், 1840-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி, தாமிரபரணி படகுத்துறையில்  பெரும் கலவரம் மூண்டிருக்கிறது. அந்தக் கலவரத்தைக் கட்டுப்படுத்த அப்போதைய ஆட்சியராக இருந்த ஈ.பி.தாம்சன் எவ்வளவோ முயன்றும், அந்தக் கலவரம் கொலையில் முடிவதைத் தடுக்க இயலவில்லை. அந்தக் கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். இது, கலெக்டர் ஈ.பி.தாம்சன் மனதை வெகுவாகப் பாதித்தது. 
அந்த இடத்தில் அனைத்து மக்களும் எளிதாகச் சென்று வர பாலம் கட்டப்பட்டிருந்தால், கலவரம் நடந்திருக்காது என வருந்தியுள்ளார். அடிக்கடி நடக்கும் கலவரங்கள், அடிதடிகள் மட்டுமல்லாமல் படகுத்துறையில் நடக்கும் வழிப்பறி, கொள்ளை போன்றவையும் கலெக்டரைக் கவலையடையவைத்திருக்கிறது. அங்கு நடந்துள்ள லஞ்ச விவகாரமும் அதிருப்தியை ஏற்படுத்தியதால், அதிகாரிகளை அழைத்து பாலம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார். 
தாமிரபரணி ஆற்றில் பாலம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கேப்டன் ஃபேபர், பொறியாளர் டபிள்யூ.ஹெச்.ஹார்ஸ்லே, சிரஸ்தார் பொறுப்பில் இருந்த சுலோச்சன முதலியார் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பின்னர் களப்பணியாற்றிய அவர்கள், வரைபடம் தயாரித்தனர். அதன்படி 760 அடி நீளத்துக்கு 21.5 அடி அகலத்தில் 60 அடி விட்டத்தில் 11 ஆர்ச்சுகள் (வளைவுகள்) அமைக்க வரைபடம் தயாரித்தனர். அந்தப் பாலம், லண்டன் நகரில் ஓடக்கூடிய தேம்ஸ் நதியின்மீது கட்டப்பட்டுள்ள வெஸ்ட் மினிஸ்டர் பாலம் போன்று இருக்க வேண்டும் என்பது கலெக்டர் தாம்சனின் கட்டளை. 
அதற்கேற்ப வரைபடம் தயாரிக்கப்பட்டது. அதைப் பார்த்ததும் கலெக்டருக்கு பூரிப்பு உண்டானது. ஆனால், இங்கிலாந்தில் இருந்து பணம் வழங்க ஒப்புதல் கிடைக்காத நிலையில், மக்களிடமே பணத்தைத் திரட்டி பாலத்தைக் கட்டுவதென முடிவானது. பாலம் கட்டும் பணிக்காக மக்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் பணியை சுலோச்சன முதலியாரிடமே வழங்கினார், கலெக்டர் தாம்சன். ஆனால் பொதுப் பணிக்காக மக்களிடம் வசூல் செய்வதில் சுலோச்சன முதலியாருக்கு விருப்பம் கிடையாது. ஆனாலும் கலெக்டரின் முடிவுக்குச் சம்மதித்தார்.
பாலத்தை 50,000 ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிப்பதென முடிவாகியிருந்தது. வீட்டுக்குச் சென்ற முதலியார், மன நெருக்கடியுடன் இருந்திருக்கிறார். அதைக் கண்ட அவரது மனைவி வடிவாம்பாள், விவரத்தைக் கேட்டுள்ளார். நடந்த விவரங்களை அவர் தெரிவித்ததும், மறுபேச்சு எதுவும் பேசாமல் தான் அணிந்திருந்த நகைகளைக் கழற்றிக் கொடுத்ததுடன், வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த நகைகளையும் எடுத்துவந்து அவரிடம் கொடுத்திருக்கிறார். 
அதை வைத்து பாலத்தைக் கட்டும் முடிவுக்கு வந்த சுலோச்சன முதலியார், கலெக்டரின் ஒப்புதலுடன் பணிகளைத் தொடங்கியுள்ளார். இந்தப் பணியில், பல்வேறு குற்ற வழக்குகளுக்காகத் தண்டனை பெற்ற 100 கைதிகள் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். நெல்லைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்த பழங்காலக் கோட்டைகளிலிருந்து கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சுண்ணாம்புச் சாந்துடன் பதநீர், கடுக்காய், கருப்பட்டி கலந்து கட்டுமானப் பணி நடந்திருக்கிறது 
பாலம் கட்டும் பணிகள் 1840-ல் தொடங்கியிருக்கிறது. பொறியாளரான டபிள்யூ.ஹெச்.ஹார்ஸ்லே சிறப்புக் கவனத்துடன் பணிகளை மேற்கொண்டிருக்கிறார். மூன்று ஆண்டு கால கடின உழைப்புக்குப் பின்னர், தேம்ஸ் நதியே இடம் பெயர்ந்து நெல்லைக்கு வந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பிரமாண்டமாகப் பாலம் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. 1843-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், பாலத்தின் பணிகள் முடிவடைந்திருக்கிறது. 
கடந்த 176 வருடங்களாக உறுதி குலையாமல் இருக்கும் இந்தப் பாலத்துக்கு, ஆண்டுதோறும் நவம்பர் மாத இறுதி வாரத்தில் மலர் மரியாதை செய்வதை எழுத்தாளர் நாறும்பூநாதன், டாக்டர் சண்முகம், கோ.கணபதி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் வழக்கமாகக்கொண்டுள்ளனர். இவர்களின் முயற்சியால் ஆண்டுதோறும் இந்தப் பாலத்தின் பெருமை வெளியே தெரியவருகின்றது. இதுகுறித்து எழுத்தாளர் நாறும்பூநாதனிடம் பேசியபோது, ’’நெல்லை, பாளையங்கோட்டை நகரங்களின் முக்கிய அடையாளங்களில் இந்தப் பாலம் தவிர்க்க முடியாதது. 176 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தப் பாலம், இப்போதும் உறுதியாக இருக்கிறது. சுண்ணாம்புடன், கடுக்காய், பதநீர், கருப்பட்டி கலந்ததால் அந்தக் கலவை பாறையைப் போல உறுதியாக இருப்பதாகச் சொல்கிறார்கள். 
 எந்த அறிவியல் தொழில்நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில், இந்தப் பாலத்தைக் கட்டியிருப்பது வியப்பாக இருக்கிறது. பாபநாசம், சேர்வலாறு என எந்த அணையும் அப்போது கட்டப்படவில்லை. அதனால், மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நீர் அனைத்தும் இந்த ஆற்றில் கலந்து பேரிரைச்சலுடன் ஓடிவந்த காலத்தில், அதில் பாலத்தை உறுதியாகக் கட்டியிருப்பது ஆச்சர்யம் அளிப்பதாக இருக்கிறது. தற்போது இந்தப் பாலத்தின் அருகே புதிய பாலம் கட்டப்பட்டுவருகிறது. ஆனால், மழை வெள்ளக் காலத்தில் கட்டமுடியாமல் திணறுகிறார்கள். அந்தக் காலத்தில், ஆற்றுக்குள் வேகமாகச் செல்லும் தண்ணீரில் தூண்களை அமைத்து, பாலத்தை உருவாக்கியிருக்கிறார்கள். 
சில வருடங்களுக்கு முன்பு, இந்தப் பாலத்தை விரிவாக்கம் செய்ய முடிவுசெய்தபோது, பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட முடிவுசெய்யப்பட்டது. அதனால், பழைய பாலத்தை இடித்திருக்கிறார்கள். ஆனால், அதை இடிக்கவே முடியவில்லை. கடப்பாரையால் பாலத்தின் சிறு பகுதியைக்கூட சிதைக்க முடியவில்லை. அதனாலேயே அதனுடன் ஒட்டியே புதிய பாலம் அமைக்கப்பட்டது. 
இந்தப் பாலம் குறித்து கால்டுவெல் தனது ’கெஜெட் ஆஃப் திருநெல்வேலி’ நூலில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது புத்தகத்தில், ‘தாமிரபரணி ஆற்றில் பாலம் கட்டி முடிக்கப்பட்டதும், பிரமாண்டமான முறையில் திறப்புவிழா நடந்தது. கலெக்டர் உள்ளிட்டோர் பங்கேற்ற அந்த விழாவின்போது, யானை முன்னே செல்ல அனைத்து முக்கியப் பிரமுகர்களும் அதன் பின்னால் அணிவகுத்துச் சென்றார்கள். சொந்தப் பணத்தில் பாலத்தைக் கட்டிய சுலோச்சன முதலியார், யானையின் பின்னால் முதலாவதாக நடந்துசென்றார். அவருக்குப் பின்னால் கலெக்டரும், அதைத் தொடர்ந்து முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள் அணிவகுத்துச் சென்றார்கள். இந்தப் பாலத்தைப் பார்த்து வியக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 
இந்தப் பாலம், நெல்லையைச் சேர்ந்த இலக்கியவாதிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் ஏதோவொரு வகையில் மகத்துவம் மிகுந்தது. சிறுகதை உலகின் மன்னன் என வர்ணிக்கப்படும் புதுமைப்பித்தன், தன்னுடைய பல கதைகளில் இந்தப் பாலத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். ’பிள்ளையார் சதுர்த்தி’ என்ற சிறுகதையில் இந்தப் பாலம் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
சுலோச்சன முதலியார் பாலம் கட்டியபோது, அதன் இரு பகுதியிலும் ஆர்ச் அமைத்து, அதில் கல்வெட்டு அமைத்திருக்கிறார்கள். ஆனால், விரிவாக்கப் பணியின்போது ஆர்ச் எடுக்கப்பட்டுள்ளது. அந்தச் சமயத்தில், அங்கு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டையும் எங்கேயோ தூக்கிப் போட்டுவிட்டார்கள். இந்தப் பாலம் நீண்ட நெடிய வரலாற்றை தன்னுள்ளே வைத்திருக்கிறது. அதன் முக்கியத்துவத்தை அனைவருக்கும் புரியவைக்க வேண்டும். தனி மனிதராக இதைக் கட்டிய சுலோச்சன முதலியாரின் தியாகத்தை வருங்கால சந்ததிக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதனால், குறிப்பிட்ட ஒருநாளில் அரசே இந்தப் பாலத்தைக் கட்டியவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் விழா நடத்த வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.
 கோ.கணபதி சுப்பிரமணியனிடம் பேசியபோது, "நமக்கு முந்தைய சந்ததியினர் நமக்காக விட்டுச் சென்ற பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும். அதுகுறித்த தகவல்களை எதிர்காலச் சந்ததியினர் அறிந்திருந்தால் மட்டுமே அதன் முக்கியத்துவம் அவர்களுக்குப் புரியும். அதனால் தான், கடந்த சில வருடங்களாக இந்தப் பாலத்துக்கு மரியாதைசெய்து, அதைக் கட்டியவரை நினைவு கூர்கிறோம். 
இந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சியின்போது, தாமிரபரணியில் பாலம் தந்த தனிக்கொடையாளி சுலோச்சன முதலியாரைப் போற்றுவோம்’ என எழுதிய பேனருடன் பாலத்தின்மீது நின்றோம். அந்தப் பாலத்தின்மீது பயணித்தவர்கள், எங்களின் இந்த முயற்சியைப் பாராட்டியதுடன், தாங்களும் எங்களுடன் பங்கேற்று பாலம் கட்டிய கொடையாளியை நினைத்துப்பார்த்தார்கள். இத்தகைய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவது மட்டுமே எங்களுடைய முதன்மையான நோக்கம். இதை அரசே மேற்கொண்டால் மகிழ்ச்சியடைவோம்’’ என்றார்.

Saturday, August 26, 2017

Tamilnadu History 3

பாண்டிய மன்னனை பிடிக்காத பாண்டிய நாட்டுக் குறுநில மன்னர்களின்உதவியோடு பாண்டியனை சோழன் வென்ற காலம் உண்டுஅப்படி வெற்றிகொண்டகாலத்தில் பாண்டிய நாட்டின் பெரும்பகுதிகள் கி.பி. 1020 முதல் 1070 வரை சோழமன்னர்களின் ஆட்சியில் இருந்திருக்கிறது.

ராஜராஜன் மகனான ராஜேந்திர சோழனின் மூன்று மகன்களான சுந்தரசோழபாண்டியன்விக்கிரமசோழ பாண்டியன்பராக்கிரம பாண்டியன் மூவரும் சோழபாண்டியர் என்ற பட்டத்துடன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்திருக்கிறார்கள்.

பாண்டிய நாட்டுக்கு இராசராச மண்டலம் எனப்பெயரிட்டு தங்கள் ஆட்சிக்குமுரண்பட்ட பாண்டியர்களை கப்பம் கட்டுமாறு உத்தரவு பிறப்பித்தனர்இப்படி கப்பம்கட்டி சோழனுக்கு அடிமையாக வாழ்ந்த காலத்திலேயேசொந்த சகோதரனைவீழ்த்துவதற்காக முகமதியர்களிடம் சொந்த நாட்டை காட்டிக் கொடுத்து வாழ்ந்தபாண்டியர்கள் இருந்தார்கள்.

கில்ஜி பேரரசின் மன்னன் மாலிக்காபூரிடம் பாண்டிய மன்னனான சுந்தரபாண்டியன்தனது தம்பியான இரண்டாம் வீரபாண்டியனை சண்டையில் வீழ்த்த உதவும்படிகேட்டான்அவனுடைய வேண்டுகோளை ஏற்று இரண்டாம் வீரபாண்டியனை வெற்றிகொண்ட மாலிக்காபூர் முடிவில் சுந்தரபாண்டியனை தனது அடிமையாக்கினான்.

அதன்பிறகு பாண்டிய நாட்டில் அமைந்திருந்த கோயில்களை மாலிக்காபூர் இடித்தான்அங்கிருந்த பொன்பொருள்களைக் கொள்ளையிட்டு சிற்பங்கள் பலவற்றை சிதைத்துஅழித்தான்கொள்ளையிட்ட பொருள்களை டில்லிக்குக் கொண்டு சென்றான்சுந்தரபாண்டியன் மற்றும் இரண்டாம் வீரபாண்டியன் ஆகியோரிடம் இருந்து 612 யானைகள், 20,000 குதிரைகள், 96,000 மணங்கு பொன்முத்து மற்றும் அணிகலன்கள்அடங்கிய பெட்டிகளையும் எடுத்துச் சென்றான்.

1320களில் மாலிக்காபூர் மதுரையைக் கைப்பற்றி 1378ஆம் ஆண்டு வரை ஆண்டான்அவன் வழி வந்தவர்கள் நாயக்கர்களால் தோற்கடிக்கப்பட்டார்கள்டில்லி துக்ளக்கின்அதிகாரியாக இருந்த 'ஜலாலுதீன் அசன்ஷாதலைமையிலும் சில காலம் மதுரைஇருந்தது.

முகமதியர் ஆட்சியின் கீழ் மாறவர்மன் குலசேகர பாண்டியன்சடையவர்மன்பராக்கிரம பாண்டியன்மாறவர்மன் வீரபாண்டியன்மாறவர்மன் பரக்கிரமபாண்டியன் ஆகிய பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்தனர்.

பின்னர், 17 ஆம் நூற்றாண்டு வரை ராயர்கள் ஆட்சி பாண்டிய நாட்டில் தொடர்ந்ததுஇவர்களுடைய ஆட்சிக் காலத்தில் பாண்டியர்கள் ஆட்சி இல்லைகி.பி. 1310 முதல் 1748 ஆம் ஆண்டு வரை தமிழகத்தை விஜயநகரப் பேரரசு ஆண்டதுநாயக்க மன்னர்கள்தமிழகப் பகுதிகளை விஜயநகரப் பேரரசின் அரசியல் அதிகாரிகளாக ஆட்சி செய்தனர்.

இவர்களுடைய ஆட்சிக் காலங்களில் தமிழகத்தில் கோயில்கள்மண்டபங்கள்சிற்பக்கூடங்கள்உலகப் புகழ்பெற்ற சிற்பங்கள் போன்றனவை உருவாக்கப்பட்டனசேரசோழபாண்டிய பேரரசுகள் வீழ்ச்சி அடைந்திருந்தனபல பாண்டிய மன்னர்கள்குறுநில மன்னர்களாக குறுகினர்அவர்கள் விஜயநகரப் பேரரசுக்கு கப்பம் கட்டும்நிலையில்தான் இருந்தனர்.

பாண்டிய நாட்டில் நிலைமை இப்படியென்றால்சோழனைப் பிடிக்காத சோழநாட்டுகுறுநில மன்னர்களின் உதவியோடு சோழனை பாண்டியர்களும் வென்றிருக்கிறார்கள்.
முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் அவனது மகனான விக்கிரம சோழன்இரண்டாம் குலோத்துங்கன்இரண்டாம் ராஜராஜன்இரண்டாம் ராஜாதிராஜன்மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆண்டனர்.

இந்த காலகட்டத்தில்சோழர்கள் தொடர்ந்து வலிமையிழந்து வந்தனர்நாட்டின்வடக்கில் ஒய்சாளர்களின் செல்வாக்கு உயர்ந்து வந்ததுகுறுநில மன்னர்களும்ஆதிக்கம் பெற நேரத்தை எதிர்பார்த்து இருந்தனர்தெற்கே பாண்டியர்கள் வலிமைபெறலாயினர்உள்நாட்டுக் குழப்பங்களும் விளைந்தன.

1216ல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் ராஜராஜன் காலத்தில் மாறவர்மன் சுந்தரபாண்டியன்தலைமையில் பாண்டியர்கள் கங்கைகொண்ட சோழபுரம் மீது படையெடுத்து அதனைக்கைப்பற்றிக் கொண்டனர்எனினும்சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனானஇரண்டாம் நரசிம்மன் சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து சோழமன்னனைக் காப்பாற்றினான்.

மூன்றாம் இராசராசனுக்குப் பின்னர் கி.பி 1246ல் மூன்றாம் ராஜேந்திரன் மன்னன்ஆனான்இவன் காலத்தில் வலிமை பெற்ற பாண்டியர்கள் சோழர்களை வென்றுஅவர்களைச் சிற்றரசர்கள் நிலைக்குத் தாழ்த்தினர்.

மூன்றாம் ராஜராஜனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிப்போயிற்று.
இப்படிப்பட்ட நிலையில்... பேரரசுகள் என்ற நிலை மாறிதுணுக்கு துணுக்காக ஆட்சிப்பகுதிகள் உருவாகத் தொடங்கினமுகமதியர்கள்நாயக்கர்கள் என்று மாறி மாறிதமிழகத்தை ஆட்சி செய்யத் தொடங்கினார்கள்.

தமிழகத்தில் இருந்த ஒற்றுமையின்மையும் ஐரோப்பா வரை பரவத்தொடங்கியதுஐரோப்பியர்களுக்கே நாட்டைக் காட்டிக் கொடுக்கும் அளவுக்கு துணிந்த தமிழ்சிற்றரசர்களும் இருந்தனர்.

பாண்டியர்கள் தமிழகத்தை ஆண்ட 13ஆம் நூற்றாண்டில், தமிழகத்தின் நிர்வாகத்தில் முஸ்லிம்கள் பங்கெடுத்துள்ளனர். அதாவது முஸ்லிம்களிடம் பாண்டியர்கள் தோல்வி அடைந்தனர். அதைத்தொடர்ந்து, சுல்தான்கள் தாங்களே ஆட்சி செய்யும்  நிலைக்கு வந்தனர். மதுரை சுல்தான்கள் ஆட்சி காலம் முடிந்து, விஜயநகர ஆட்சி அமைந்தது. அந்தக் காலகட்டத்தில், இஸ்லாமியர்கள் தமிழகத்தின் கடலோர பகுதியில் பலம் பெற்று இருந்தனர்.

1532 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களைச் சமாளிக்க முடியாத கடலோரத் தமிழர்கள் சிலர், கொச்சியில் ஆட்சி செய்த போர்ச்சுக்கீசியரிடம் உதவி கேட்டுப் போனார்கள். அப்படி உதவி கேட்டுப் போனவர்கள் முதலில் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு உதவியாக வந்த போர்ச்சுக்கீசியரின் படை இஸ்லாமியர்களைத்  தோற்கடித்தது.

அதன்பின்னர்,  20 ஆயிரம் பேர் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். இப்படியாக 1532 ஆம் ஆண்டு ஐரோப்பியர்கள் தமிழகத்தின் கடலோரப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு தமிழர்களே உதவியாக இருந்தனர்.

முதலில், தூத்துக்குடி அருகே உள்ள புன்னைக்காயலை தலைமை இடமாகக் கொண்டு போர்ச்சுக்கீசியர்கள் செயல்பட்டனர். அதைத் தொடர்ந்து தங்கள் தலைமை இடத்தை தூத்துக்குடிக்கு மாற்றினர்கள். இந்தக் காலகட்டத்தில் போர்ச்சுக்கீசியர்களுக்கும் நாயக்கர் ஆட்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது சண்டைகள் நடந்தன.

இதனிடையே, 1605 ஆம் ஆண்டு கிழக்கிந்திய டச்சு கம்பெனி தொடங்கப்பட்டு, இந்தியாவின் கடற்கரை பகுதிகளை இந்திய மன்னர்களிடமிருந்து கைப்பற்றி, கோட்டை கொத்தளங்கள் மற்றும் குடியிருப்புகளை அமைத்து வணிகத்தை தொடங்கியது.

அவர்களைத் தொடர்ந்து பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியும் இந்தியாவைக் குறிவைத்தது. ஆனால், போர்ச்சுக்கீசியரின் ஆக்கிரமிப்பு, டச்சுக்காரர்களின் வணிகம் ஆகியவற்றுக்கு இடையே பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி போட்டி போட முடியவில்லை.

வாசனைப் பொருட்களின் வணிகத்தில் டச்சுக்காரர்கள் கொண்டிருந்த கட்டுப்பாட்டைப் பிரிட்டிஷ் கம்பெனியால் அசைக்க முடியவில்லை. அந்தக் கம்பெனியால் கிழக்கிந்தியாவில் தொடர்ச்சியாக ஒரு தளத்தைக்கூட அமைக்க முடியவில்லை. 

1608 ல், நிறுவனக் கப்பல்கள் இந்தியாவின் சூரத்தை அடைந்து அங்கே தங்களை அமைத்து நிலை நிறுத்திக் கொண்டனர். அடுத்த இரண்டு வருடங்களுக்குள், கோரமண்டல் கரை எனப்பட்ட இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில், மசூலிப்பட்டினத்திலும் ஒரு தளத்தை அமைத்தனர்.



மசூலிப்பட்டிணத்திற்கு ஐரோப்பியர்கள் வருகை

அப்போதிருந்து போர்ச்சுக்கீசியர்கள் மற்றும் டச்சு கம்பெனிகளுக்கும் பிரிட்டிஷ் கம்பெனிக்கும் போட்டி அதிகரித்தது. அது பகைமையாகி, சூரத்தில் உள்ள சுவாலிக் கடற்கரையில் போர்ச்சுக்கீயருக்கும் பிரிட்டிஷ் கம்பெனிக்கும் இடையே 1612 ஆம் ஆண்டு போர் மூண்டது. அந்த போரில் போர்ச்சுக்கீசியரை பிரிட்டிஷ் கம்பெனி தோற்கடித்தது.

அந்தப் போருக்கு பின்னர்தான், முகலாய பேரரசர் ஜஹாங்கீரிடம் இந்தியாவில் வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில் வணிகம் செய்ய அனுமதி கிடைத்தது. அதைத்தொடர்ந்து, கீழ் கோவா, பம்பாய் ஆகிய இடங்களில் தளங்களை அமைத்திருந்த போர்ச்சுக்கீசியரை கம்பெனி பின்னுக்கு தள்ளியது. 

1639ல் சூரத், மதராஸ், 1668ல் பம்பாய், 1690ல் கல்கத்தா என முக்கிய இடங்களில் தனது வலுவான நிலைகளை பிரிட்டிஷ் கம்பெனி அமைத்தது. மதராசபட்டினம் என்ற கிராமத்தின் அருகே வர்த்தக மையத்தை அமைக்க சந்திரகிரி அரசரிடம் அனுமதி பெறப்பட்டது. 1640 ஆம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டி தனது வணிகத்தை விரிவுபடுத்தத் தொடங்கிய பிரிட்டிஷ் கம்பெனி, கொஞ்சம் கொஞ்சமாக ஆட்சி அதிகாரங்களுக்குள் மூக்கை நுழைத்தது. கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையிடமாக மாறியது மதராஸ்.



செயிண்ட் ஜார்ஜ் கோட்டை

இந்நிலையில்தான் 1658 ஆம் ஆண்டு, போர்ச்சுகீயர்கள் தங்கள் பொறுப்பில் இருந்த கடலோர பகுதிகளை டச்சுக்காரர்களிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள் தரங்கம்பாடியில் கோட்டை கட்டி அந்தப் பகுதியை ஆட்சி செய்யத் தொடங்கினர். டச்சுக்காரர்களுக்கும் பாளையக்காரர்களுக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு இருந்து வந்தது.

'இராசேந்திர சோழன் பிரகடனங்கள்' எழுதப்பட்ட 21 செப்பேடுகளை இந்தக் காலகட்டத்தில்தான் டச்சுக்காரர்கள் தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்றனர். தமிழ் அரசுகளின் வரலாற்று ஆவணங்கள் காட்டிக்கொடுத்த தமிழர்களின் உதவியோடு எப்படியெல்லாம் சிதறடிக்கப்பட்டு, தொலைந்து போயின என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

பிரெஞ்சுக்காரர்கள் பாண்டிச்சேரியில் கோட்டை கட்டி ஆண்டது தனி வரலாறு. அது ஒருபக்கம் இருக்கட்டும். 



புதுச்சேரியில் பிரெஞ்ச் கோட்டை

1692 ஆம் ஆண்டு மொகலாயப் பேரரசர் அவுரங்கசீபின் படை தனது பங்கிற்கு கர்நாடக மற்றும் தமிழக பகுதிகளைத் தாக்கி வென்றது. தான் வென்ற பகுதிகளில் வரி வசூல் செய்ய கலிபா உமர் இப்னு அல் கத்தாப் என்பவரை அவுரங்கசீப் நியமித்தார். அவர் தனது தலைமையில் மதுரை வரை மொகலாய ஆட்சியை விரிவுபடுத்தினார். 

1736 ஆம் ஆண்டு மதுரையில் நாயக்க அரச குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதையறிந்த அன்றைய ஆற்காடு நவாப் தென்தமிழகத்தையும் தனது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வர முற்பட்டார். அந்தச் சமயத்தில் ஒரு மராட்டிய படை ஆற்காடு நவாப்பை தோற்கடித்து திருச்சியையும் மதுரையையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. சில காலமே நீடித்த இந்த அரசை மீண்டும் ஆற்காடு நவாப் தோற்கடித்து, அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த தென் பகுதிகளை இணைத்துக் கொண்டார். 

1749 ஆம் ஆண்டு முகமது அலி வாலாஜா என்பவர் நவாப் பதவிக்கு வந்தார். இவருடைய காலத்தில் மதநல்லிணக்கம் சிறப்பாக இருந்தது. பிரிட்டிஷார் இவருடன் நல்லுறவு வைத்திருந்தனர். தென் தமிழகத்தையும் தனது பிடியில் கொண்டுவர நவாப் விரும்பினார்.

அதை நிறைவேற்ற 1751 ஆம் ஆண்டு ஆற்காடு நவாபின் படை தென்தமிழகம் நோக்கி சென்றது. அந்தப் படையில் 2500 குதிரை வீரர்களும், 3000 உதவி ஆட்களும், கிழக்கிந்திய கம்பெனியை சார்ந்த 30 ஐரோப்பியர்களும் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் பாளையங்கோட்டையை தலைமை இடமாக கொண்டு வரிவசூலில் ஈடுபட்டனர். . 

இந்நிலையில்தான் 1765 ஆம் ஆண்டு டெல்லி அரசுக்கு கப்பம் செலுத்துவதை நிறுத்தினார். டெல்லி அரசாங்கத்தாலும், தனக்கு கீழுள்ள பாளையக்காரர்கள் மற்றும் சிற்றரசர்களால் ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்கவும் பிரிட்டிஷ் கம்பெனி படையுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டார். இப்படித்தான் ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டு அரசியலில் தலையிடத் தொடங்கினர்


இந்தக் காலகட்டத்தில் நவாபின் படைக்கு தலைமை தாங்கியவர் ஒரு தமிழர். முஸ்லிமாக மதம் மாறிய அவருடைய பெயர் மொகமது யூசுப் கான். அவருடைய நிஜப்பெயர்தான் மருதநாயகம்.