Saturday, December 19, 2015

உயிர் பெறும் ராமாயண ஜடாயு...!

ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள ஜடாயு பறவையின் பிரமாண்ட சிலையுடன்,  கேரளத்தில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள பறவைகள் சரணாலயம், வரும் ஜனவரி 2016 மாதத்தில் திறக்கப்படவுள்ளது.
கொல்லம் மாவட்டம், ஜடாயுமங்கலம் என்ற இடத்தில் 65 ஏக்கர் பரப்பளவில் பறவைகளுக்கான இந்த அழகிய பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பூங்கா அமைப்பதற்காக ரூ. 100 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்படப்பட்டது. அழகிய குட்டி குட்டி மலைகள், பள்ளத்தாக்குள், நீர்வீழ்ச்சிகள் இந்த பூங்காவில் உள்ளன .அதோடு சுற்றுலாப்பயணிகள்  'ட்ரெக்கிங்' மேற்கொள்ளும் வகையிலும் இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

ராமாயணத்தில் இடம் பெற்றுள்ள பறவை ஜடாயுவின் சிலை 200 அடி நீளத்திலும், 150 அடி அகலத்திலும், 70 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து ராவணன் சீதையை தூக்கிக் கொண்டு செல்லும் போது, வழிமறித்த ஜடாயு பறவை அவனுடன் போரிடுகிறது. ராவணனால் வீழ்த்தப்பட்டு, ஜடாயு பறவை தரையில் விழுந்தது.
ஜடாயுவின் தியாகத்தை போற்றும் வகையில், அதே வடிவிலான சிலை அமைக்கப்பட்டுள்ளதாக கேரள சுற்றுலாத்துறை கூறியுள்ளது.



அதோடு இந்த ஜடாயு சிலைக்குள் 6 டி தியேட்டர், ராமாயண கதையின் டிஜிட்டல் கண்காட்சி அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. வரும் ஜனவரி மாதத்தில் ஜடாயு சிலை திறக்கப்படவுள்ளது.

 

No comments: